Friday, 17 June 2016

உன்னை துறந்த எனக்கு எதையும் துறக்க முடியும்.

திடீரென ஒரு ஞாபகம். அந்த பெட்டி. அதில் இருந்த அந்த உடல். மெய் சிலிர்த்து நின்றேன். கண்கள் கலங்கின.

இந்த வலி ஒரு நாள் முற்றும் தொலைந்து போகும் என்று  நம்பினேன். அப்படி நடந்ததாக தெரியல.

இறப்பு மட்டும் துன்பத்தை கொடுப்பது இல்லை. பொறுப்புக்கள், உறவுகள் எதிர்ப்பார்ப்புக்கள், ஏமாற்றங்கள் இவைகள் எல்லாம் துன்பத்தைத் தரும்.

துன்பத்தில் இருந்து தப்பிக்க துறவறம் நல்ல வழினு நிறைய யோசித்து இருக்கிறேன். அதுவும் உண்மை இல்லை.

பொறுப்புக்களை துறக்க முடியாது.
உறவுகளையும் துறக்க முடியாது.
எதிர்ப்பார்ப்புக்களைத் துறக்கலாம் அதனால் ஏமாற்றங்கள் துறந்து போகும்.

இதில் நான் கண்டு பிடித்தது என்னவென்றால்;
உன்னை துறந்த எனக்கு எதையும் துறக்க முடியும், உயிர் உட்பட பெரிதாக தெரியல.

2 comments:

  1. மழலை மொழியின் அழகு ரசிக்கும் வண்ணம் அமைந்தது❤

    ReplyDelete
  2. மழலை மொழியின் அழகு ரசிக்கும் வண்ணம் அமைந்தது❤

    ReplyDelete