Wednesday, 18 October 2017

50 வயதில்

ரேவதி, ரேவதி... எழுந்து வா. காமாட்சி ஓடி போச்சு. மற்றவர்கள் போறத்துக்கு முன் நம்ப போகலாம். வா.

சரி, சரி. கொஞ்ச நேரம் நில்லு, நான் பல்லை மட்டும் தேச்சுட்டு வரேன்.

இவ்வளவு தூரம் நடந்து வந்துட்டோம், எங்கே போயிருக்கும் இந்த காமாட்சி. அடிக்கடி இப்படி ஓடுதே!

அது தானே இயற்கை. கிடேரி மாடு, பசுவாகும் முன் காளையை தேடி ஓடுவது இயல்பு. இத்தனை மாடுகளை பார்த்து இருக்கிறோம், இது இன்னும் உனக்கு புரியலயா என்ன?

தெரியும், தெரியும். இந்த கிடேரிகள் ஓடும்போது எல்லாம் நாம் இருவரும் சேர்ந்து ஓடுகிறோம் இல்லை. மாட்டை தேடும் சாக்குலெ தோட்டம், பழ மரங்கள் எல்லாம் ஏறி பழம் பறித்து சாப்பிடுகிறோம்.

ஆமாம்.. அந்த சீன கிழவி கண்ணுல படாம வெள்ளரி பிஞ்சை பிடுங்கி கன்றுகுட்டி போல நறுக்கு நறுக்குனு நொருக்கிடுவே இல்லை.

ஹா ஹா. ஆமாம். திருட்டு வெள்ளரி பிஞ்சு அவ்வளவு ரூசி. அங்கே பாரு ரேவதி, காமாட்சி நிற்குது. வா. நம்ப அதை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்.

ஹ்ம்ம், சரி. அது வந்த வேலை முடிந்து இருந்தால் இன்னும் கொஞ்ச மாதங்களில் கன்று ஒண்ணு பிறக்கும் இல்லை?

ஆமாம். மறுபடியும் சீம்பால், பால் சப்ப்லை, கன்று குட்டி குளிக்கும் காட்சி.. ஜாலியாக இருக்கும்.

* பத்து வயது ஞாபகம்*

******************************************

காலேஜ் வந்த பிறகு ஒரே வீட்டு ஞாபகம் வசந்தி. இந்த கோர்ஸ் வேறே ரொம்ப கஷ்டமா இருக்கு.

இது தானே முதன் முறையாக வீட்டை விட்டு வந்து இருக்கீங்க. எல்லாம் சரியாகி விடும். அப்பிள் செய்து இருக்கீங்க இல்லை. பார்ப்போம் எப்படி பதில் வருதுனு. பட், தமிழ் மொழி கோர்ஸ் தானே, நாங்கள் எல்லாம் இருக்கிறோம், உதவி செய்து உங்களை கரை சேர்த்து விடுவோம். அதே போல ஆங்கில பயிற்சிகள், ஆராய்ச்சி நூல்கள் செய்யும்போது எங்களுக்கு நீங்கள் உதவ மறந்து விடாதீர்கள்.

நன்றி வசந்தி. ஏதோ நீங்கள் இருப்பது எனக்கு பெரிய ஆறுதல். தெங்க்ஸ்.

ஒண்ணும் யோசிக்காதீங்க. நல்லா பாட்டு பாடுறீங்க. வந்த கொஞ்ச நாட்களில் எத்தனை ஃபேமஸ் நீங்கள். மலாய் பாரம்பரிய பாடல்களை வேறு பிச்சு உதருகிறீர்கள். காலேஜ் முழுக்க உங்களை தெரியாதவர்கள் யாருமே இல்லை.

ஹ்ம்ம். ஆனாலும் எனக்கு இங்கே அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. ஏதோ குறை இருப்பது போலவே இருக்கிறது.

                                ***

எனக்கு ரொம்ப வலியாக இருக்கு வசந்தி. கழுத்தை அசைக்க முடியல.

பொறுமையாக இருக்கனும் நீங்கள். ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்யும் போது விழுந்துட்டிங்களாமே?

ஆமாம். தலைகீழாக நிற்கும் போது கை தவறி விழுந்து விட்டேன். கழுத்து எலும்பில் சாஃப்ட் திஷு காயம்னு டாக்டர் சொன்னார். வீட்டிற்கு சொல்லல. இந்த வாரக்கடைசியில் வீட்டுக்கு போவென். அப்போது அம்மாவிடம் சொல்லிக்கலாம்னு இருக்கிறேன்.

 அதுவும் சரிதான். எதற்கு தேவையில்லாமல் அவர்களை பதற வைக்கனும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் நம் காலேஜ் வாழ்க்கை முடிய போகிறது. நீங்கள் செய்த அத்தனை உதவிகளையும் மறக்க மாட்டேன், வசந்தி. தேங்க்ஸ்.

தோழர்கள் மத்தியில் இதெல்லாம் என்ன பெரிய விஷயம். மூன்று ஆண்டுகள் போன வேகம் தெரியல இல்லை?
                          ***
ஐயா, எனக்கு ஒரு டீ கொடுங்க. என் அத்தான் வரும்வரை இந்த பைகளை இங்கே வைக்கிறேன் சரிங்களா?

வையுங்க அம்மா. ஒண்ணும் பிரச்சினை இல்லை.

நீங்கள் சாப்பிட்டீங்களா ஐயா?

நாங்கள் சாப்பிட்டோம். நீங்கள் சொன்ன மாதிரி அந்த இலங்கை பையனுக்கு உணவு கொடுத்துவிட்டேன்.

சரி ஐயா. நன்றி. பணம் எவ்வளவு கொடுக்கனும்னு சொல்லுங்க.

அன்றைக்கு கொடுத்தது போதுமானது அம்மா. என்ன ஊருக்கு புறப்படுகிறீர்களா?

ஆம் ஐயா. காலேஜ் முடிந்தது. வேலைக்கு அழைப்பு கடிதம் வரும்வரை வீட்டில் ஓய்வு. அதோ அத்தானும் வந்து விட்டார். யாராவது கொஞ்சம் உதவிக்கு அனுப்புங்கள் ஐயா. பைகளை வண்டியில் ஏற்றனும்.

* 20 வயது ஞாபகம்*

******************************************

என்ன ஒண்ணும் சாப்பிடாமல் இப்படி வாசலையே பார்த்து கொண்டு இருக்கிறே? வா கொஞ்சமா சாப்பிடு. இப்படியே இருந்தால் வயித்துல உள்ள பிள்ளைக்கு எப்படி சத்து பத்தும்?

அவரை இன்னும் காணல, அதான் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு காத்திருக்கிறேன்!

ஐய்யே! இது என்ன புதுசா உனக்கு? எந்த காலத்துல அவன் டைம் ஓட வந்து இருக்கிறான். நீ வந்து சாப்பிடு. வாந்தி வேறே, சாப்பிடலனா உடம்பு வீணாகும். வா.

                                   ***

என்னங்க. எனக்கு ஸ்கூலுக்கு லேட்டாகுது. கொஞ்சம் வேகமாக வாங்கலேன். இன்றைக்கு அச்சாவுக்கு முதலாண்டு திதி வேறே. பள்ளியில் இருந்து நேரத்தோட புறப்பட்டு வரனும். லேட்டா போய் வெல்லன வரனும்னு சொன்னால் முகம் சுழிப்பார்கள்.

                                   ***

என்ன தோழி. மறுபடியும் உங்களை மருத்துவ மனையில் பார்க்கிறேன்? கால் எலும்பு முறிந்து விட்டதாமே?

ஆமாம் வசந்தி. அவசர அசசரமாக பள்ளிக்கு புறப்பட்டு போனதில் சேலை முந்தானையை சரியாக வைக்கல. மோட்டார் சைக்கிள் டயரில் மாட்டியதில் நான் கீழே விழுந்து விட்டேன். தொடை எலும்பு தாறுமாறாக உடைந்துவிட்டது.

டாக்டரிடம் பேசிட்டுதான் வந்தேன். இண்டெர்ட்ரொய்காண்டிக் மல்டி கொம்முனல் ஃப்ரெக்ச்சர். பெரிய இரும்பு பூட்டி இருக்கிறாராம் உங்கள் இடுப்பில். ஒன்று இல்லை, பத்து. இனி நீங்களும் பயோனிக் பெண்.

ஹ்ம்ம். எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும்னு சொன்னார். அதுவரை அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்.

ஏன் அம்மா வீட்டிற்கு போறிங்க? இங்கே யாரும் உங்களை பார்க்க மாட்டார்களா?

என் கணவரின் தாய், தங்கம். ஆனால் இங்கே இருந்தால் அத்தனை சரிப்படாது. அவர் தாமதமாக வீட்டிற்கு வருவார். சில சமயம் போதையில் வருவார். மன அழுத்தம் தரும்.

அதுவும் நல்லது தான். தாய் வீட்டில் இருந்தால் வேகமாக குணம் அடைந்து விடுவீர்கள்.

                                  ***

என்னங்க? என்ன இப்படி தொப்பையாக வந்திருக்கீங்க? ஐயோ என்ன முட்டியில் காயம். ஜீன்ஸ் கிழிந்து போயிருக்கு!

.....

என்ன தண்ணீ சாப்பிட்டு வரிங்களா? எவ்வளவு சொன்னாலும் மண்டையில் உங்களுக்கு ஏறாது! எல்லாம் என் தலை எழுத்து! நிறை மாதம் எனக்கு. இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கீங்களேன்.

                                 ***

அம்மா, அம்மா.. அச்சா எங்கே இன்னமும் காணல? என்னிடம் இன்றைக்கு ஸ்டோருக்கு போகலாம்னு சொன்னாரே!

எந்த கடையில் உட்கார்ந்து இருக்கார்னு தெரியில ரூபி! நாளைக்கு தீபாவளி வேறே.

ஏன் அம்மா இவர் மட்டும் இப்படி? செரிச்சா பாருங்க, காலையில் இருந்து வீட்டில் தான் இருக்கிறார். நாம் வேணும்னா அச்சா எங்கே இருக்கிறார்னு போய் தேடி பார்க்கலாமா? ஏதாவது கடையில் இருந்தார்னா அப்படியே கடைக்கு கூட்டிட்டு போகலாம்.

ஹ்ம்ம் சரி. போகலாம். ஆனால் நான் அவரோடு பேச போவதில்லை. ஏதுவாக இருந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் பேசிக்கொள்ளுங்க. வேலையை முடித்ததும் ஓய்வு எடுக்கனும். கால் எல்லாம் எப்படி வீங்கி இருக்கு பாரு.

பாவம் அம்மா நீங்கள். இவ்வளவு பெரிய வயிறோடு எவ்வளவு வேலை செய்கிறீர்கள். இந்த அச்சா இருந்து என்ன பயன்.

                          ***

நிறைய கடைகளில் தேடியாச்சுமா. வாங்க வீட்டுக்கு போகலாம். எனக்கும் அம்முவுக்கும் ரொம்ப பசி.

சரி. வீட்டில் கொஞ்சம் உணவு இருக்கிறது. உங்களுக்கு தருகிறேன். அவர் வரும்போது வரட்டும். வந்ததும்
 வச்சுக்கலாம்.

அம்மா, அங்கே பாருங்களேன். வீட்டு வெளியே சின்ன தாத்தா, மாமா எல்லாம் நிற்கிறார்கள். ராத்திரி ஆயிடுச்சே! இப்போது ஏன் இங்கே வந்து இருக்காங்க?

தெரியலயே! ஒரு வேலை...

                         ***

ஹலோ! என்ன நடக்குது இங்கே? எல்லாரும் வீட்டு வெளியே வந்து நிற்கிறார்கள். கேட்டா எதுவும் சொல்ல மாட்டுறாங்க? ஜெயனுக்கு எதுவும் ஆச்சா?

ஆமாம். அப்படி தான் சொல்றாங்க!

என்ன இறந்து போய்ட்டாரா?

ஆமாம். மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விட்டாரம். எதிரே வந்த வண்டி அவர் மேல் ஏறி அம்புலான்ஸ்ல போகும்போது உயிர் போய்விட்டதாம். உங்கள் பெயரை தான் சொல்லிக்கொண்டே இறந்தாராம். பாவம், பாவம்னு சொன்னாராம்!

ஐயோ! நான் அவரிடம் பிரியாவிடை கூறலயே! தப்பு பன்னிட்டேனா?

                            ***

ஏன் அம்மா அச்சா அப்படி இருக்கிறார். பெட்டியில் போட்டு வைத்து இருக்கிறார்கள்?

அச்சா இறந்து விட்டார் அம்மு. அச்சா இனி இல்லை.

*முப்பது வயது ஞாபகம்*

******************************************

 அம்மா.. அம்மா.. எல்லா பைகளும் எடுத்துட்டீங்களா? வண்டி எடுக்கலாமா?

எல்லாம் எடுத்தாச்சு. இரு கொஞ்ச நேரம் திவ்யாவை தூக்கிவிட்டு வருகிறேன். ஆறு மாதங்களாக பார்க்கிறேன் இல்லையா, கவலையாக இருக்கு எனக்கு.

அட இதை பாருடா, உங்கள் சட்டையை பிடித்து கொண்டு விடாமல் அழுகிறாளே? பேசாமல் நீங்கள் அவளையும் கூட்டிக்கிட்டு போங்க. அவள்
 நீங்கள் இல்லாமல் ஏங்கி போய் விடுவாள்னு தோணுது.

அதுவும் நல்லது தான். நீயும் உன் பட்டப்படிப்பில் முழுமையாக கவனம
 செலுத்தலாம்.

                            ***
இவன் ஏன் எந்த நேரமும் அழுது கொண்டே இருக்கிறான். என்னால் தூங்கவே முடியல.

அவனுக்கு வயிறு வலி அங்கல். பால் குடித்ததும் தினமும் இப்படி தான். நீங்கள் அடிக்கடி வெளி ஊரில் இருப்பதால் உங்களுக்கு இது தெரியல.

ச்சே! பேசாமல் நான் ஹோட்டலில் தங்கிடலாம் போல. நிம்மதி இல்லை இந்த வீட்டுல. என்ன பிள்ளை வளர்க்கிறாங்களோ உங்கள் அம்மா!

                          ***

யாருடன் ஃபோன் பேசுறீங்க? ஃபோனை இங்கே கொடுங்க அம்மு!

முடியாது அங்கல். இது என்னுடைய ஃபோன்.

எதிர்த்து பேசுறியா? தோலை உரித்து விடுவேன் ஜாக்கிறதை!

                           ***

எவ்வளவு நேரம் இந்த பேஸ்மெண்டில் இப்படி இருக்கிறது?

பொறுமையாக இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவரு வண்டி சத்தம் கேட்கும். அதற்கு பிறகு துணி மணிகளை எடுத்துக்கிட்டு பாட்டி வீட்டுக்கு போயிடலாம்.

இதெல்லாம் ஒரு பொலப்புனு நீங்களும் இருக்கீங்க. நாங்கள் என்ன பாவம் செய்தோம்னு இப்படி துன்பபடுகிறோம்!

இருக்கிற பிரச்சினையில் நீயும் ஆரம்பிக்காதே! எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வரும்.

*40 வயது ஞாபகம்*


 *****************************************
அம்மாவுக்கு என்ன?

மன உளைச்சல்னு சொல்றாங்க.

இப்போது நம்ம என்ன செய்யனும்? ஒரே குழப்பமாக இருக்கு!

டாக்டரிடம் பேசினேன். மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்து இருக்கிறார். பாட்டி வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம். ஓய்வு எடுத்து மருந்து சாப்பிட்டால் சீக்கிரமாக குணம் அடைந்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். பாட்டி தான் அம்மாவுக்கு ரைட்டான வைட்டமின்.

                               ***

அப்பா! இப்போ தான் நிம்மதி. நம்மல யாரும் தொந்தரவு செய்ய முடியாது இல்லை!

ஆமாம். ஆனாலும் இந்த நிலைக்கு வர நாம் நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம்.

ஹ்ம்ம். அம்மா எங்கே?

ஆமாம் டீச்சர் எங்கே?

அவங்க அறையில் இருக்கிறாங்க. 730க்கு வெளியே வருவாங்க. நமக்கு வகுப்பு இருக்கு இல்லையா!

ஞாபகம் இருக்கா, அவங்க தூங்கும் போதும், தியானத்தில் இருக்கும் போதும் யாரும் தொந்தரவு செய்ய கூடாது!

தெரியும். அது மட்டும் தானே அவங்க ஓய்வா இருக்கும் நேரம். நாங்கள் அதை கெடுப்போமா என்ன? எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவங்க அவங்க.

ஹ்ம்ம். நீங்கள் வந்த பிறகு தானே அவருக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது. சிஸ்டம்னு சொல்வாங்க.

தூங்கும் போதும், தியானம் செய்யும்போது கையில் அந்த கைலி எப்போதும் இருக்கும். அது ஏன்?

அது அவங்களுக்கு பிடித்த கைலி. கேட்டால் குரு கொடுத்ததுனு சொல்வாங்க. சரி, சரி அம்மா வருகிர நேரம். எல்லாம் புத்தகத்தை எடுங்கள். படிக்கலாம். சரியா 9 மணிக்கு உணவு.

நாளை காலையில் கராத்தே பயிற்சி இருக்கு இல்லை?

ஆமாம். ஒண்ணும் மாற்றம் இல்லை. காலையில் கராத்தே, மாலையில் கச்சேரி. பொழுது சரியாக போனால் உங்களுக்கு உருவாக்கம். இது அம்மா கணக்கு. ;)

                           ***

அம்மா.. கோவிலுக்கு பொய்ட்டு வந்து பார்க்கிறேன் கதவு பூட்டி கிடக்கு. உள்ளே இவர்கள் எல்லாம் தூங்கி கொண்டு இருக்கிறார்கள் போல. எல்லாம் பெரிய வாலு. வேணும் என்றே செய்திருப்பார்கள் போல.

ஹ்ம்ம். நோ ச்பெக்குலேஷென். பிரச்சினை வந்தால் தீர்வு செய்யனும். சொலுஷன். ச்திரெஸ் இல்லாமல் அப்போது தான் வாழ முடியும். வீட்டு ஃபோனுக்கு கோல் பன்னியா?

ஆமாம். யாரும் எடுக்கல. இப்போது என்ன செய்யலாம்?

ஒண்ணும் பிரச்சினை இல்லை இது. லாக்ஸ்மித் இருக்கிறார். அவரை அழைத்து கதவை திறக்க சொல்லனும். அவருக்கு அழைத்து விட்டேன். அவர் வந்ததும் உள்ளே பூட்டும் அந்த பூட்டை கழுட்டி விடலாம்.

பணம் செலவாகுமே!

பணம் தானே. சம்பாரிக்கலாம். உடல், உளம், சிந்தனை தெளிவாக இருந்தால் எதையும் செய்யலாம். இவர்களின் உருவாக்கம் என் இலட்சியம்.

                 ***

50 வயதில் தெளிவாக பயணம் போகிறது.

என் வாழ்க்கை என் கையில்.



Tuesday, 17 October 2017

தீபாவளி

வணக்கம். எப்படி இருக்கீங்க?

நான் நலம். தீபாவளி அதுவுமா இங்கே உட்கார்ந்து என்ன செய்றீங்க?

ஒண்ணும் இல்ல செய்ய அதான் இங்கே பொழுது போக உட்கார்ந்து இருக்கிறேன்.

உங்கள் மக்கள்? மனைவி?

எல்லாம் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருக்கின்றார்கள். என்னை யாரும் கண்டுக்கல.

ஏன் அப்படி? எந்த மனைவியுடன் இருக்கீங்க இப்போ?

யாருடனும் இல்லை. மூனு பேரும் கூட்டணி சேர்ந்து என்னை புறக்கணித்தார்கள். நான் இப்படி இந்த கடையில் நேரத்தை கழித்து தூங்கும் நேரம் மட்டுமே வீட்டுக்கு போகிறேன்.

ஏன்?

அவர்கள் பேசும் பேச்சு. அப்பப்பா! நாக்கை பிடுங்கி செத்து போகலாம்.

உங்களுக்குள் என்ன பிரச்சினை? நல்லா தானே இருந்தீங்க, எத்தனை மக்கள் உங்களுக்கு?

மூன்று பேருக்கும் மொத்தம் 13 பேர். அதில் ஒருவன கார் விபத்தில் இறந்து போனான்.

ஓ. மன்னிக்கனும். மற்றவர்கள்?

8 பெண் பிள்ளைகள். எல்லார்க்கும் கல்யாணம் முடிந்து அவரவர் புருசன் வீட்டுக்கு போய்விட்டார்கள்.

நீங்கள் ஏன் அவர்கள் வீட்டுக்கு போகல? அங்கே இந்த பெருநாளைக் கொண்டாடலாமே?

என்னை யாரும் சேர்த்துக்கல. அது இதுனு என் மேலே பழி சுமத்துகிறார்கள்.

அப்படி என்ன உங்கள் குற்றம்?

ஹ்ம்ம். மூன்று குடும்பத்தையும் சரியாக கவனிக்காமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து மக்களை நிராகரித்தது என் குற்றமாம். இப்போது எல்லாரும் சேர்ந்து என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். சின்ன வயசுல ஆடின ஆட்டத்திற்கு இப்போ அனுபவிக்கிறேன்.

இதற்கு என்ன தான் தீர்வு? ஒண்ணும் நீங்கள் முயற்சி செய்யலயா? ஒரு பிள்ளை கூட உங்களுக்கு ஆறுதலாக இல்லையா?

எல்லார்க்கும் என்னை பிடிக்கல. அவர்களை குத்தம் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. என் மேல் நிறைய தவறு இருக்கிறது. ஹ்ம்ம்ம். பெரு மூச்சு விட்டு விட்டு காலத்தை போக்க வேண்டியது தான்.

சரி சரி. கவலை பட வேண்டாம் நீங்கள். என்னுடன வாங்க. அந்த கடையில் நல்ல இட்லி கிடைக்கும். பசியாறியதும் உங்கள் பொழுதை  எப்படி சரியாக போக்கலாம்னு ப்லான் போடலாம்.

அது சரி. என்ன சொல்லிட்டு, நீங்கள் மட்டும் ஏன் இங்கே வந்து அதுவும் கடையில் இட்லி சாப்பிட போறீங்க? உங்கள் மக்கள், கணவர்?

எல்லாம் இருக்கிறார்கள். அவர் அவர் வீட்டில். எனக்கு இதில் எல்லாம் அத்தனை விருப்பம் இல்லை.

ஏன்? உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள ஒதுக்கிட்டாங்களா என்ன?

இல்லை, இல்லை. எந்த வீட்டிற்கு போனாலும் எனக்கு எல்லா பராமரிப்பும் கிடைக்கும். நானே இப்படி தூரமாக விலகி இருக்கிறேன். மற்ற நாட்களில் எல்லோரையும் பார்ப்பது உண்டு. தீபாவளி மட்டும் கொஞ்சம் அலெர்ஜி!

ஏன் அப்படி? தீபாவளிக்கும் உங்களுக்கும் என்ன பகை.

பகை இல்லை. வாழ்க்கையில் நடந்த ஒரு துயரம். அது துரதிர்ஷ்டவசமா தீபாவளிக்கு நடந்து விட்டது.

அப்படி என்ன துயரம்?

எனக்கு முக்கியமான ஒருவர் தீபாவளிக்கு முதல் நாள் கார் விபத்தில் இறந்து போனார். அவரை தீபாவளி அன்று எரித்து கடலில் கரைத்து கதையை முடித்து விட்டார்கள். இந்த நாளை கொண்டாட முடியல.

ஹ்ம்ம். கொஞ்சம் கஷ்டம் தான். கவலைப்பட வேண்டாம்.

கவலைனு சொல்றதுக்கு இல்லை. காலம் காயங்களை மறைய வைத்தது. இது ஏதோ ஒரு விரக்தி போல.  வேலைகளில் மூழ்கி நாட்கள் ஓடுகின்றது. எது எப்படி இருந்தாலும் என்னைவிட நிறைய கஷ்டப்படுபவவர்களைப் பார்க்கும் போது என் வாழ்க்கை சிறப்பானதுனு உணரும் எனக்கு வாழ்க்கை இனிமையான ஒன்றுதான்.

உங்கள் மன உறுதியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு.

ஹ்ம்ம். என் கதை ஒரு பக்கம் இருக்கட்டும். எங்கள் இல்லத்தில் வேலை செய்ய வருகிறீர்களா?

வேலையா? எனக்கு 70 வயது ஆகிறது. என்னால் நிறைய வேலைகளை செய்ய முடியாது.

பெரிய வேலை கிடையாது. எங்கள் இல்லத்தில் பிள்ளைகளுக்கு தாத்தாவாக இருங்கள். உங்களுக்கு தெரிந்த கதை சொல்லுங்க. உங்களுக்கும் பொழுது போகும், குழந்தைகளுக்கும் ஒரு நல்ல அனுபவமாகும். என்ன சொல்றீங்க? உங்களுக்கு உணவு கொடுத்து விடுவோம். நீங்கள் செய்யும் உதவிகளுக்கு சிறு சன்மானமும் கொடுப்போம்.

ரொம்ப நன்றி. கரும்பு தின்ன கூழியா என்ன? சந்தோஷமா இருக்கு. இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்.

இது உதவி இல்லை, வேலை வாய்ப்பு. ;)